சென்னை,டிசம்பர்.27- மாணவி பாலியால் வன்கொடுமை வழக்கை தாமாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வெளிநபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த வழக்கு குறித்த விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்றே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.